வணக்கம் அன்பர்களே ! வாழ்க்கை என்பதை ஒரு பயணமாகக் கொண்டால், நம்முடன் சேர்ந்து பயணிப்பவர்கள் ஏராளம்; பயணத்தின் போது நாம் காணும் காட்சிகள் ஏராளம்; சந்தர்ப்பத்திற்கேற்ப நாம் எடுக்கும் முடிவுகளும் ஏராளம். இவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் தீர்மானிக்க முடியும். எந்த நேரத்தில் எந்தத் தத்துவம் பயன்படும் என்பது யாருக்கும் தெரியது. ஒருசிலவற்றை இங்கு படமாகக் கொடுத்துள்ளோம். கண்டு பயன் பெறுங்கள்.
1) பூவோடு இருப்பதால் முள்ளை யாரும் விரும்புவதுமில்லை.. முள்ளோடு உள்ளதென்று பூவை வெறுப்பதுமில்லை..... 2) பிடித்தது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததைப் பிடித்துக் கொள்ள வேண்டியது தான். 3) நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று தெரிந்ததும் நாய் வாலை நிமிர்த்தும் முயற்சியைக் கை விடுவதே புத்திசாலித்தனம். 4) அறிவாகப் பேசுவதை விட பரிவாகப் பேசுபவர்களிடமே மனம் அதிகம் பேச விரும்பும்... 5) இரக்க மனமும் இரும்பாகிப் போகிறது, சிலர் சுயநலவாதியாகும் போது... 6) போதித்தால் புரியாது பாதித்தால் தான் புரியும் அறிவுரை வழங்காதே கேட்காத வரை

முள்ளோடு உள்ளதென்று பூவை வெறுப்பதுமில்லை…..




போது…

கேட்காத வரை