பெண்ணே! பூவுலகின் கண்ணே!

எழுவாள் அதிகாலையில் சுடர் எழுதிடு கதிரொடு – அவள் எழுதிட  மலர்ந்திடும் – நிதம் எமையாளும் கலைக்கோலம் – நதி எனவேயதில்  குழலும்  அலைபாயும் ! 
தொழுவாளவள் மலர்வாள் துணையெனவே சகியாய் – அவள் வழுவா குணமுடையாள் – ஒரு வானொளிர் தாரகையாய்த் – தனிச்  சுயமாயொரு  திடமாய்  !.  சுகமாய்ச் சுந்தரமாய் ! 
பதமாய்  விருந்தளிப்பாள் பரிவுடன்தான் என்றும் – அவள் பாராமுகத் தவர்க்கே நின்றும் – அவள் நிதமேயொரு குறையெனினும் – அதை நினையாள் மனத்தாலென்றும்!
இதமேதரும்  செயல்யாவும் இனித்திடுமே  இங்கு – ஒரு இசையாய் ஒலித்திடும் பங்கு – தரும் இயற்கையின் பரிசாய்த் தங்கு – என் இடர்பல களைந்து.!
முனைவர்.கிருட்டிணதிலகா.போரூர்.சென்னை.

முனைவர்.கிருட்டிணதிலகா.போரூர்.சென்னை.

Leave a Comment

Your email address will not be published.