141 பிறர் மனைவியை விரும்பாதவரே அறவாணர். 142 எத்தகைய பெரியோரும் பிறன்மனை புகுந்தால் சிறியோனே. 143 பிறர் மனைவியை நாடுவோனைப் பழி நாடும். 144 பிறர் மனைவியை விரும்பினால் பகை பாவம் அச்சம் பழி வரும். 145 பிறர்மனைவியை விரும்பா வாழ்வே அறவாழ்வு. 146 பிறர் மனைவியைத் தழுவாதவரே அறத்தைத் தழுவியவர். 147 அறம் செய்தலினும் நன்று பிறர் மனைவியை விரும்பாமை. 148 தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்குக. 149 பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று. 150 அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறுத்தலே வலிமையுள் வலிமையாகும்.









