பெண்ணே! பூவுலகின் கண்ணே!
எழுவாள் அதிகாலையில் சுடர் எழுதிடு கதிரொடு – அவள் எழுதிட மலர்ந்திடும் – நிதம் எமையாளும் கலைக்கோலம் – நதி எனவேயதில் குழலும் அலைபாயும் ! தொழுவாளவள் மலர்வாள் துணையெனவே சகியாய் – அவள் வழுவா குணமுடையாள் – ஒரு வானொளிர் தாரகையாய்த் – தனிச் சுயமாயொரு திடமாய் !. சுகமாய்ச் சுந்தரமாய் ! பதமாய் விருந்தளிப்பாள் பரிவுடன்தான் என்றும் – அவள் பாராமுகத் தவர்க்கே நின்றும் – அவள் நிதமேயொரு குறையெனினும் – அதை நினையாள் மனத்தாலென்றும்!இதமேதரும் செயல்யாவும் …